யாழ்.மாவட்டத்தின் இன்றைய நிலமை இதுவே..! மாவட்டம் இப்போதும் பாதுகாப்பாக உள்ளது, பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் இன்றைய நிலமை இதுவே..! மாவட்டம் இப்போதும் பாதுகாப்பாக உள்ளது, பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 78 போில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இந்த பரிசோதனை நடாத்தப்பட்டிருக்கின்றது. இதன்படி 

* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்

* வவுனியா பொது வைத்தியசாலை - 4 பேர்.

* யாழ் மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள்(சாரதி மற்றும் உதவியாளர்) - 30 பேர்

* வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள் (சாரதி மற்றும் உதவியாளர்) - 10 பேர்

* மன்னார் மாவட்டத்திற்கு கொழும்பிலிருந்து கடமையின் நிமித்தம் வந்தவர்கள் - 13 பேர். இதன்போது பரிசோதிக்கப்பட்டதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு