ஊரடங்கு சட்டத்தை சாதகமாக்கி 4 பாடசாலைகளில் திருட்டு..! கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டத்தை சாதகமாக்கி 4 பாடசாலைகளில் திருட்டு..! கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் 4 பாடசாலைகளை உடைத்து திருடிய 3 குற்ற ச்சாட்டில் கைதான 3 பேரை மே மாதம் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருடப்பட்ட பொருள்கள் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாக பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டன.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை கார்த்திகேசு வித்தியாலயம், 

தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாசாலை, பொன்னாலை வரதராஜப்பெருமாள் வித்தியாலயம் மற்றும் சுப்ரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 

ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதிதியில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.4 பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து மடிகணினி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டிருந்தன. 

அதுதொடர்பில் பாடசாலை அதிபர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், 

திருடப்பட்ட பொருள்களுடன் 3 பேரைக் கைது செய்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு