53 பேருடைய பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும்..! மாலையில் பார்ப்போம் என்கிறார் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்..
யாழ்.மாவட்டத்தில் 53 பேருடைய இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று மா லை குறித்த பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறி யிருக்கின்றார்.
கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ் .போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு யாழ்.மாவட்டத்தில் கொரோனோ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கமைய கொழும்பில் இருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகன சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் என 33 பேர் உள்ளிட்ட 53 பேரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோனை செய்யப்பட்டது.இப் பரிசோதனையின் முடிவுகள்
இன்று செவ்வாய்க்கிழமை வெளிவருமென்று பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.