அடுத்தடுத்து சாவுகளால் நிறையும் யாழ்.மாவட்டம்..! நாவலர் வீதியில் மயங்கி விழுந்தவர் மரணம்..

ஆசிரியர் - Editor I
அடுத்தடுத்து சாவுகளால் நிறையும் யாழ்.மாவட்டம்..! நாவலர் வீதியில் மயங்கி விழுந்தவர் மரணம்..

யாழ்.நாவலர் வீதியில் முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது-65) என்பவரே உயிரிழந்தவராவார்.

உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து 1990 அம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. 

அங்கு அம்புலன்ஸ் வண்டி வந்த போதும் முதியவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு