அடுத்தடுத்து சாவுகளால் நிறையும் யாழ்.மாவட்டம்..! நாவலர் வீதியில் மயங்கி விழுந்தவர் மரணம்..
யாழ்.நாவலர் வீதியில் முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது-65) என்பவரே உயிரிழந்தவராவார்.
உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து 1990 அம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது.
அங்கு அம்புலன்ஸ் வண்டி வந்த போதும் முதியவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.