யாழ்.மாவட்டத்தில் மேன்முறையீடு செய்த 5038 பேருக்கு இன்று 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம்..! உங்கள் பகுதி சமுர்த்தி உத்தியோகஸ்த்தரை நாடுங்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேன்முறையீடு செய்த 5038 பேருக்கு இன்று 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம்..! உங்கள் பகுதி சமுர்த்தி உத்தியோகஸ்த்தரை நாடுங்கள்..!

யாழ்.மாவட்டத்தில் 1 லட்சத்தி 63 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 808.79 மில்லியன் ரூபாய் நி தி வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்ட செயலர், 5038 குடும்பங்களுக்கு இன்று(ஞாயிற்று கிழமை) சமுர்த்தி வங்கிகள் ஊடாக தலா 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இது குறித்து யாழ்.மாவட்ட செயலர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 76 ஆயிரத்து 41 குடும்பங்கள், சமுர்த்தி பயனாளிகளாக இணைக்கப்படவேண்டிய 11 ஆயிரம் குடும்பங்கள், மாவட்டத்திலுள்ள வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட (தினசரி வேலையை இழந்தவர்கள்) 39 ஆயிரத்து 473 குடும்பங்களுக்குமாக 

1 லட்சத்து 26 ஆயிரத்து 665 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் மேன்முறையீடு செய்து அரசினால் இறுதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள 5038 குடும்பங்களுக்கான நிதி சமுர்தி வங்கிகளுக்கு அனுப்பபட்டிருக்கின்றது. இந்த நிதி நாளை (இன்று ஞாயிற்று கிழமை) ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பினும், 

சமுர்த்தி உத்தியோகத்தர்களை அணுகி தமது 5 ஆயிரம் ரூபாய் நிதியை பெற்றுக் கொள்ளலாம். மேலும் யாழ்.மாவட்டத்தில் உள்ள 23 ஆயிரத்து 433 குடும்பங்களுக்கு இதுவரையில் முதியோர் நிவாரணமாக தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் 8165 மாற்று திறனாளிகள் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 

நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவே நாளை( இன்று) வழங்கப்படும் 5038 குடும்பங்களுக்கான நிவாரணத்துடன் யாழ்.மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபா ய் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை நிறைவடைகின்றது. எனவே மொத்தமாக யாழ்.மாவட்டத்தில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 808.79 மில்லியன் ரூபாய் 

நிவாரணமாக வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு