யாழ்.நகரில் வீடொன்று பொலிஸாரினால் அதிரடி முற்றுகை..! சமூக சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகம், இரு பெண்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் வீடொன்று பொலிஸாரினால் அதிரடி முற்றுகை..! சமூக சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகம், இரு பெண்கள் கைது..

யாழ்.நகரில் நாவலர் வீதி பகுதியில் இடம்பெற்றுவந்த சமூக சீரழிவு நடவடிக்கை தடு த்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் கைது செய் யப்பட்டிருப்பதாக யாழ்.பொலிஸார் கூறியுள்ளனர். 

சற்று முன்னர் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் குறித்த பெண்களை கைது செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே தனிமைப்படுத்த பொலிஸார் 

மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக 

கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 

பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினார். அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரையும் பொலிஸார் விசாரணை நடத்தினர்.அதன்போது அங்கிருந்தவர்கள் விசாரணைகளின் போது 

தொடர்ந்து முன்னுக்கு பின் முராண தகவல்களை வழங்கியுள்ளனர்.இதனால் இன்றைய தினம் இருவரும் குறித்த வீட்டிலையே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு