தண்ணீர் எடுக்க சென்றிருந்தவர் மீது தாக்குதல் நடாத்தி, துாசணத்தால் பேசி வட்டுக்கோட்டை பொலிஸார் மீண்டும் சண்டித்தனம்..!

ஆசிரியர் - Editor I
தண்ணீர் எடுக்க சென்றிருந்தவர் மீது தாக்குதல் நடாத்தி, துாசணத்தால் பேசி வட்டுக்கோட்டை பொலிஸார் மீண்டும் சண்டித்தனம்..!

தண்ணீர் எடுக்க சென்ற பொதுமகனை வழிமறித்த பொலிஸார் 3 மாதங்களாக நாங் கள் தண்ணீர் இல்லாமல் இருக்கிறோம். உனக்கு ஒரு நாளுக்கு தண்ணீர் இல்லாமல் இ ருக்க முடியாதா? என கேட்டு தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர். 

இந்த சம்வம் சித்தங்கேணி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் பா துகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரே பொதுமகனுடன் இவ்வாறு தகாதமுறையில் நடந்து கொண்டு சண்டித்தனம் காட்டியிருக்கின்றனர். 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் தண்ணீர் எடுப்பதற்கு முகக் கவசம்அணிந்தவாறு சித்தங்கேணி பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளார். இதன்போது சித்தங்கேணி சந்தியில் 

கடமையில் இருந்த பொலிஸார் இருவர் அவரைமறித்து விசாரித்துள்ளனர். அதன்பின்னர், நாங்கள் மூன்று மாதம் தண்ணீர் இல்லாமல் இருக்கிறோம் உனக்குஎதுக்கு தண்ணீர் என கேவலமான தூசன வார்த்தைகளில் பேசியுள்ளனர். 

இதன்போது வேறு பலரும் அவ் வீதியால் பலரும் சென்றுவந்துள்ளனர்.அ தன்பின்னர் அவர் திரும்பிச் செல்ல முற்பட்ட போது, அவர் கொண்டுவந்த தண்ணீர் போத்தலை(கேன்) காலால் உதைந்து வீழ்த்தி அவர் மீது தாக்குதல்நடத்தியுள்ளனர். 

இதன்பின்னர் பொலிஸார் உதைந்த தண்ணீர் (கேனை) போத்தலைஎடுத்துக் கொண்டு தண்ணீர் எடுக்காது அவர் திரும்பிச் சென்றார்.இதேவேளை மது போதையில் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திகாயப்படுத்திய சம்பவம் 

தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராகமனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு