யாழ்.மாவட்டத்தில் கொடிகட்டி பறக்கும் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரம்..! 2 நாட்களில் 3 பேர் கைது, 30 லீற்றர் கசிப்பு மீட்பு..
யாழ்.உரும்பிராய் பகுதியில் 24 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
சந்தேக நபரிடமிருந்து 24 லீற்றர் கசிப்பு மற்றும் அதனைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்படதாகப் பொலிஸார் கூறினர்.
இதேபோல் கோப்பாய் பொலிஸ் பிரிவில் கசிப்பினை பைக்கற்களில் அடைத்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 6 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டிருந்து.
இதேவேளை, மதுபான சாலைகள் பூட்டப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி ஆங்காங்கே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.