யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினரை காணவில்லை..! தொண்டமனாறு- மயிலியதனை மயானத்திற்கு அருகில் உடமைகள், மோட்டார் சைக்கிள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினரை காணவில்லை..! தொண்டமனாறு- மயிலியதனை மயானத்திற்கு அருகில் உடமைகள், மோட்டார் சைக்கிள் மீட்பு..

யாழ்.வலி,கிழக்கு பிரதேசசபை உறுபினர் இ.செந்துாரனின் தொலைபேசி, அடையாள அட்டை, மோட்டார் சைக்கி ள் உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு மயிலியதனை மயானத்திற்கருகில் வல்வெட்டித்துறை பொலிஸாரி னால் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், 

குறித்த பிரதேசசபை உறுப்பினரை காணவில்லை. என அவருடைய குடும்பத்தினர் தொிவித்திருக்கின்றனர். மே லும் பொலிஸார், உறவினர்கள், நண்பர்கள் இணைந்து அவரை தேடும் நடவடிக்கையினையும் இரவு ஆரம்பித்தி ருப்பதாக கூறப்படுகின்றது. 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, தொண்டமனாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்றிரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர். 

அதுதொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கினர்.இன்றிரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து கோப்பாயைச் சேர்ந்த இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர். 

அதன் பின்னர் அவரது மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம், தலைக்கவசம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் தேடிவருகின்றனர். அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை என்று உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு