யாழ்.மாவட்டத்தில் இன்று 29 பேருக்கு பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை..
யாழ்.மாவட்டத்தில் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 29 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசா லை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர், யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 3 பேர்,
நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 20 பேர், யாழ்.மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 3 பேர் என 29 பேருக்கு யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் இந்த பரிசோதனை இடம்பெற்றது.
இதன்போதே எவருக்கும் தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.