16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த மிகுதி 4 பேருக்கும் தொற்றில்லை..!

ஆசிரியர் - Editor I
16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த மிகுதி 4 பேருக்கும் தொற்றில்லை..!

சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய நிலையில் பலாலி தனிமைப்படு த்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 20 போில் 16 பேர் கொரோனா தொற்றுக் குள்ளான நிலையில் மிகுதி 4 பேருக்கு தொற்றிலிருந்து தப்பியுள்ளனர். 

இன்றைய தினம் குறித்த 4 பேருக்கும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள வர்களுக்கு உணவு வழங்கிய 4 இராணுவத்தினருக்குமாக 8 பேருக்கு பரிசோதனை மே ற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் 8 பேருக்கும் தொற்றில்லை. 

என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை மாகாண சுகாதார பணிப்பாளர் மருத் துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு