இன்று மாலை அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம்..! சுவிஸ் போதகரினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இன்று இறுதி பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
இன்று மாலை அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம்..! சுவிஸ் போதகரினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இன்று இறுதி பரிசோதனை..

யாழ்.அரியாலை மதபோதகருடன் பழகிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 346 பே ருக்கான பரிசோதனைகள் இன்றுடன் நிறைவடைவதாக மாகாண சுகாதார பணிப்பா ளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சுவிஸ் போதகருடன் பழகிய நிலையில் வடக் கு மாகாணத்தில் 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். எனினும் அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த 2ம், 3ம் கட்ட பரிசோதனைகள் நடாத்தப்பட்டது.

இந்த பரிசோதனையின் இறுதி நாள் இன்றாகும். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத் தில் உள்ள 4 பேர் உள்ளடங்கலாக தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கான இறுதிக் கட்ட பரிசோதனை இன்று நடாத்தப்படுகின்றது. 

இன்றைய பரிசோதனையில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படாத விடத்து சுவிஸ் போதகரால் தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர்கள் விடயம் நிறைவுக்கு வரும். அதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்த 

1200ற்கும் மேற்பட்டவர்கள் யாழ்.மாவட்டத்தில் உள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் நிலையில் கட்டாயம் பரிசோதிக்கப்படவேண்டியவர்களுக்கு மிக விரைவில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு