யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர் அனுமதி..! கொரோனா சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர் அனுமதி..! கொரோனா சந்தேகம்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தின் பெயரில் 11 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர் தற்போது கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 109 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 388 பேருக்கும் இதுவரையில் 

பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு