கொழும்பிலிருந்து யாழ்.மாவட்டத்திற்குள் நுழைந்த அரசியல்வாதியால் ஆபத்து..! தவராசா எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து யாழ்.மாவட்டத்திற்குள் நுழைந்த அரசியல்வாதியால் ஆபத்து..! தவராசா எச்சரிக்கை..

சுகாதார நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் கொழும்பிலிருந்து அரசியல்வாதி ஒருவர் யாழ்ப்பாணம் சென்றிருப்பதாக வடமாகாணசபை முன்னாள் எதிர்கட்சி தலை வர் சி.தவராசா குற்றஞ்சாட்டியிருக்கின்றார். 

இது குறித்து கொழும்பை தளமாக கொண்டியங்கும் ஊடகம் ஒன்றுக்கு கருத்து கூறும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகை யில், பொறுப்பான அரசியல்வாதி ஒருவர் பொறுப்பற்ற விதத்தில் 

இவ்வாறு நடந்து கொண்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது. யாழ்.மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது 

எனவும் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு