யாழ்.மாவட்டத்தில் 19 பேருக்கு இன்று பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 19 பேருக்கு இன்று பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை..

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 19 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிரு க்கும் நிலையில், எவருக்கும் தொற்றில்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள 18 பேருக்கும் இன்று பரிசோதணை நடத்தப்பட்டது.

அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதணைக்காக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.குறித்த பரிசோணைகளின் முடிவின்படி 

எவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு