நிவாரண பொருட்களை அரசியல்வாதியிடம் வழங்குமாறு கூறினேனா..? விசாரணை நடாத்துமாறு மாவட்ட செயலர் பகிரங்க சவால்..

ஆசிரியர் - Editor I
நிவாரண பொருட்களை அரசியல்வாதியிடம் வழங்குமாறு கூறினேனா..? விசாரணை நடாத்துமாறு மாவட்ட செயலர் பகிரங்க சவால்..

நிவாரண பொருட்களை அரசியல்வாதி ஒருவரிடம் ஒப்படைக்குமாறு யாழ்.மாவட்டச் செயலர் கூறியதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறிய கருத்து குறித்து விசாரணை நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

தேர்தல் ஆணைக்குழுவின் உறவினர் ரட்ணஜீவன் கூல் ஊடகம் ஒன்றுக்கு கருத்து கூறுகையில் யாழ்.மாவட்ட செயலர் நிவாரண பொருட்களை அரசியல்வாதி ஒருவரிடம் வழங்குமாறு கூறினார் என கூறியுள்ளார். 

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில் நான் அவ்வாறு எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே அந்த கருத்து தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசாரணை நடாத்தவேண்டும். என தாம் ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளதாக மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு