உயிர்த்த ஞாயிறு மிலேச்சத்தனமான படுகொலையின் 1ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..!
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்க ளின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று காலை யாழ்.ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் nஐபரட்னம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை 8.45 மணிக்கு
இந்த நினைவேந்தல் வழிபாடு இடம்பெற்றது. இந்நினைவேந்தல் வழிபாட்டில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளார்
உள்ளிட்ட மதகுருமார்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்
கொரோனோ தொற்றிலிருந்து நாட்டு மக்கள் மிக விரைவில் மீள வேண்டுமென்றும் பிராத்தனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.