வடக்கு சுகாதாரதுறையின் சிபார்சுகளை மீறி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது ஏன்..? அபாய வலயத்திலிருந்து யாழ்ப்பாணம் நீக்கப்பட்டது எப்படி..?

ஆசிரியர் - Editor I
வடக்கு சுகாதாரதுறையின் சிபார்சுகளை மீறி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது ஏன்..? அபாய வலயத்திலிருந்து யாழ்ப்பாணம் நீக்கப்பட்டது எப்படி..?

வடமாகாண சுகாதாரதுறையின் பரிந்துரைகளை மீறியே யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளது. மாகாண சுகாதாரதுறையின் பரிந்துரைகளின் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் 6 பிரதேச செயலர் பிரிவுகளில் அடுத்தவாரமும், ஏனையவற்றில் மே மாதம் 5ம் திகதியின் பின் னரும் ஊரடங்கு சட்டத்தை நீக்கலாம். என்றே சிபார்சு செய்யப்பட்டிருந்தது. 

அதனைப் புறக்கணித்து நாளை முதல் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் ஊர டங்கு நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும். நாட்டின் 9 மாகாணங்களினதும் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இடையில் கடந்த புதன் கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் தற்போதுள்ள நிலைமை ஆராயப்பட்டது. 

ஊரடங்கு நீக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்களாலும் தமது மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஊரடங்கை எப்படித் தளர்த்துவது என்பது தொடர்பான பரிந்துரை, மாகாண ஆளுநர்களுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. 

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அடுத்த வாரம் ஊரடங்கைத் தளர்த்த முடியும் என்று குறிப்பிடப்ப ட்டிருந்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை, காரைநகர், சாவகச்சேரி, மருதங்கேணி ஆகிய 6 பிரதேசசெயலர் பிரிவுகளும் ஆபத்துக் குறைந்த பிரதேசங்கள் என்பதால் 

அடுத்த வாரம் ஊரடங்கை நீக்க முடியும் எனவும் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் கொரோனா சோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகளைப்பொறுத்து மே மாதம் 5ஆம் திகதிக்குப் பின்னர் ஊர டங்கை நீக்கலாம் என்றும் பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு நேற்றுமுன் தினம் வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமால் குணரத்னவும். 

யாழ்ப்பாணத்தில் இப்போதைக்கு ஊர டங்கு தளர்த்த வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே அரசு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தை அதி இடர் அபாய வலயப் பிரதேசத்திலிருந்து விடு வித்தமைக்கான காரணத்தையும் அரசு தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு