மகிழ்ச்சியான செய்தி..! யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்துள்ள நிலையில், திங்கள் கிழமை யாழ்ப்பாணம் வருகின்றனர்..
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 17 போில் வெலிகந்த விசேட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் குணமடைந்து நாளை மறுதினம் யாழ்ப்பாணம் அழைத்துவரப்படவுள்ளனர்.
மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், குறித்த இருவரும் பூரண குணமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வருகின்றனர்.
இவர்கள் அவர்களது இருப்பிடங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றார்.