கோப்பாயில் 50 பேர் இரு நாட்களில் கைது..! மக்களே அவதானம், வாகனங்கள், மரக்கறி பறிமுதல்..

ஆசிரியர் - Editor I
கோப்பாயில் 50 பேர் இரு நாட்களில் கைது..! மக்களே அவதானம், வாகனங்கள், மரக்கறி பறிமுதல்..

யாழ்.கோப்பாய் பொலிஸ் எல்லைக்குள் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 50 பேர் இரு நாட்களில் கைது செய்யப்பட்டிருப்பதாக கோப்பாய் பொலிஸார் கூறியுள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடினர் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதி இன்றி ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 

50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு