யாழ்.பலாலி தனிமைப்படுத்தலில் மீதமுள்ள 4 பேருக்கும் கொரோனா தொற்றிருக்க வாய்ப்பு..! நாளை பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி தனிமைப்படுத்தலில் மீதமுள்ள 4 பேருக்கும் கொரோனா தொற்றிருக்க வாய்ப்பு..! நாளை பரிசோதனை..

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மிகுதி 4 நபர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க அதிகளவு சந்தர்ப்பம் உள்ளதாக கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, 

நாளை குறித்த 4 பேருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகியதற்காக தனிமைப்படுத்தல் 20 பேர் வைக்கப்பட்டனர். 

அவர்களில் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக 8 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர், 3ம் கட்டமாக 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தற்போது 4 பேர்மட்டுமே அங்குள்ள நிலையில், 

அவர்களும் தொற்றுக்குள்ளாகியிருக்க 100 வீதம் வாய்ப்புக்கள் உள்ளது. அவர்களுக்கு நாளை பரிசோதனை நடாத்தப்படவுள்ளது. அந்த பரிசோதனையில் தொற்றுக்குள்ளாகவில்லை. என்றாலும் அவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருப்பர். 

அவர்களுக்கான பரிசோதனை தொடர்ந்து நடத்தப்படும் என கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு