யாழ்.மானிப்பாய் பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை..! 2 நாட்களுக்கு மண்டபம் இழுத்து பூட்டப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை..! 2 நாட்களுக்கு மண்டபம் இழுத்து பூட்டப்பட்டது..

யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 15 பேருக்கும், காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்குமாக 16 பேருக்கு மானிப்பாய் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று கொரோனா தொற்று பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15ம் திகதி யாழ்.அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோத கர் நடாத்திய ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட்டுவரும் 16 பேருக்கே இந்த பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. 

இதற்காக மானிப்பாய் பிரதேசசபை கலாச்சார மண்டபம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு சந்தேகநபர்கள் அழைத்துவரப்பட்டு உரிய இடைவெளியில் அமர்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

பரிசோதனையின் பின்னர் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் சந்தேகநபர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், கலாச்சார மண்டபம் மற்றும் பயன்படுத்தப்பட்ட தளபாடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டது. 

மேலும் கலாச்சார மண்டபத்தை 2 நாட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு மண்டபம் பூட்டப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு