யாழ்.சாவகச்சோி பொலிஸார் அடாவடி..! கூட்டுறவு பணியாளர் கைது, உயர்மட்ட அழுத்தத்தின் பின் விடுதலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி பொலிஸார் அடாவடி..! கூட்டுறவு பணியாளர் கைது, உயர்மட்ட அழுத்தத்தின் பின் விடுதலை..

யாழ்.சாவகச்சோி பகுதியில் கூட்டுறவு பணியாளர் ஒருவர் ஊரடங்கு நேரத்தில் நடமாடுவதற்கான அனுமதி பத்திரம் வைத்திருந்தபோதும் பொலிஸார் அவரை கைது செய்து 45 நிமிடங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்திருந்து விடுதலை செய்துள்ளனர். 

குறித்த பணியாளர் அனுமதிப் பத்திரம் வைத்திருந்தும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கூட்டுறவு பணிப்பாளருக்கு அறிவித்து பணிப்பாளர் பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பு கொண்டதும் பணியாளர் விடுவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பணியாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது சாவகச்சேரியில் உள்ள வங்கி ஒன்றிற்கு அலுவலக நிமிர்த்தம் சென்ற போது அங்கு நின்ற மக்கள் எல்லோரையும் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது நின்றதாக தெரிவித்து கைது செய்து பஸ் ஒன்றில் ஏற்றியுள்ளனர். 

தன்னையும் கைது செய்ய முற்பட்ட போது தான் அனுமதி பத்திரத்தை காண்பித்த போதும் அதனை கண்டு கொள்ளாமல் பொலிஸார் தன்னையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பணிப்பாளர் பொலிஸ் மேலதிகாரியுடன் தொடர்பு கொண்டதும் தான் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்ற கேள்வி எழுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு