யாழ்.மாதகலில் தனிமைப்படுத்தல் நிலையமா..! கடற்படை துருப்புக்கள் குவிக்கப்பட்டதால் மக்கள் குழப்பம்..
யாழ்.மாதகல் பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர். எனினும் அது தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கான முயற்சியல்ல என அறியக்கிடைத்ததை தொடர்ந்து மக்கள் அடங்கியுள்ளனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் கடல் வழியாக இந்தியாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்த மேலதிகமாக கடற்படை, விமானப்படை துருப்புக்கள் களமிறக்கப்படுகின்றனர். இவ்வாறு களமிறக்கப்படும் மேலதிக துருப்புக்களை தங்கவைப்பதற்காக
பாடசாலைகளை வடமாகாண கல்வியமைச்சு வழங்கியிருக்கின்றது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பாடசாலைகளையும், யாழ்.மாதகல் பகுதியில் நுணசை வித்தியாலயத்தையும் கல்வியமைச்சு ஒதுக்கியிருக்கும் நிலையில் இன்று மாலை மேலதிக துருப்புக்கள் வந்திறங்கிய நிலையில்,
தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அச்சமடைந்த மக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும் உண்மை தொிந்த நிலையில் திரும்பியிருக்கின்றனர்.