யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 8 நோயாளிகளின் இரத்த மாதிரிகளை அனுராதபுரம் அனுப்ப நடவடிக்கை..! யாழ்.பரிசோதனையில் சந்தேகமா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 8 நோயாளிகளின் இரத்த மாதிரிகளை அனுராதபுரம் அனுப்ப நடவடிக்கை..! யாழ்.பரிசோதனையில் சந்தேகமா..?

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் நேற்றய தினம் கொரோனா தொற்றுடன் அடையா ளம் காணப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் நெருக்கமான தொடர்பை பேணிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 22ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை கடந்த 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் பத்து பத்து பேராக 

பரிசோதனைக்கு உட்படுத்திய போது , முதல் நாள் 3 பேர், மறுநாள் 3 பேர் என 6 பேர் கோரொனோ தொற்றுக்கு உள்ளானார்கள் என அடையாளம் காணப்பட்டனர்.14 பேர் தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்டனர். 

 அன்றைய தினம் அடையாளம் காணப்படாத 14 பேரையும் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் பரிசோதித்த போது , அவர்களில் 08 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அந்நிலையில் மேலதிக பரிசோதனைக்காக குறித்த 8 பேரினுடைய மருத்துவ மாதிரிகள் 

மற்றும் பரிசோதனை அறிக்கைகள் என்பவற்றை யாழ்.போதனா வைத்திய சாலை ஊடாக அனுராத புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா பரிசோதனைகள் 100வீதம் உறுதியான முடிவுகளை தராது என மருத்துவர்கள் கூறும் நிலையில், நேற்று நடைபெற்ற பரிசோதனை முடிவுகளில் சந்தேகம் உள்ளதா? என கேள்விகள் எழுப்படுகின்றது. 

ஆனால் அது வெறும் சந்தேகம் மட்டுமே. அனுராதபுரத்திற்கு சோதனைக்காக அனுப்புவது வழக்கமான நடவடிக்கையே ஆகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு