யாழ்.பொலிஸார் அதிரடி..! ஊரடங்கு நேரடி கள்ளர்கள் 7 பேர் கைது, 6 லட்சம் பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸார் அதிரடி..! ஊரடங்கு நேரடி கள்ளர்கள் 7 பேர் கைது, 6 லட்சம் பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்பு..

யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது திருட்டுக்களில் ஈடுபட்டிருந்த 7 பேர் யாழ்.பொலி ஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதுடன், 6 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட் டிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றார். 

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்கள், நீர்ப்பம்பி மற்றும் இலத்திரனியல் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பான குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் முனசிங்க தலைமையிலான அணியினர் நடாத்திய விசாரணையின்போது 

நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் வயோதிபர் ஒருவர் தனது ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக யாழ்ப்பாணம் நகரத்துக்கு வருகை தந்தபோது 

அவரின் வீட்டுக்குள் புகுந்து தொலைபேசி மற்றும் அவருடைய கடன் அட்டை போன்ற பெறுமதியான பொருள்களை திருடிய குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.தொடர் விசாரணைகளில் 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நாவற்குழியைச் சேர்ந்தவர்கள்.களவாடப்பட்ட 6 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு