புதுவருட தினத்தில் வீதிகளில் நின்று வழிபாடு நடாத்தும் மக்கள்..! நல்லுார் உள்ளிட்ட பல கோவில்களில் உள்நுழைய தடை..

ஆசிரியர் - Editor I
புதுவருட தினத்தில் வீதிகளில் நின்று வழிபாடு நடாத்தும் மக்கள்..! நல்லுார் உள்ளிட்ட பல கோவில்களில் உள்நுழைய தடை..

புதுவருட தினமான இன்று கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வரும் நிலையில், யாழ்.நகர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கோவில்கள் பூட்டப் பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. 

இன்றைய தினம் காலை நல்லுார் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் மக்கள் வழிபாடுகளை நடா த்த முயற்சித்தனர். எனினும் கோவில் வளாகத்திற்குள் நுழைய நிர்வாகம் தடைவித்திருந்தமையால் வீதிகளில் நின்று மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருந்தனர். 

இதேவேளை யாழ்.நகர் பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் முச்சக்கர வண்டிகளில் பொலிஸார் ஒலிபெரு க்கிகளை பொருத்தி புதுவருடத்தை அமைதியானமுறையில் வீடுகளில் இருந்து இந்த கொண்டாடுமாறு கேட்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு