பருத்துறை ஆதாரவைத்தியசாலை பணிப்பாளர் அதிரடியாக பதவி நீக்கம்..! விசாரணை நடாத்த மத்திய சுகாதார அமைச்சு பணிப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்து விசாரணைகளை நடாத்துமாறு மத்திய சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார அமைச்சுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. 

கொரோனா எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தவறியதுடன், வைத்தியசாலை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என பணிப்பாளர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்குள் குறித்த பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கும் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சு இந்த பணிப்பை விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு