வெற்றிகரமாக 2ம் வாரத்தின் 2ம் நாள் நிறைவு..! 17 பேருக்கு யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை..! எவருக்கும் தொற்றில்லை.
யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை 17 பேருக்கு இன்று நடைபெற்றிருந்த நிலையில் எவருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
சாவகச்சேரி சுகாதார பிரிவுக்குட்பட்ட 12 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேருக்குமாக மொத்தம் 17 பேருக்கு பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது. இதன்போதே எவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.