கொள்ளை இலாபம் தேடிய யாழ்ப்பாண வர்த்தகர்கள் 4 பேர் சிக்கினர்..! வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை..
விலை நிர்ணய தீர்மானத்தை மீறி அரிசி விற்பனையில் ஈடுபட்டிருந்த யாழ்.வர்த்தகர்கள் 4 பேர் பாவனையாளர் அதிகாரசபையின் பிடியில் சிக்கியிருக்கின்றனர்.
பொதுமக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகாரசபையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே குறித்த வர்த்தகர்கள் மாட்டியுள்ளனர். என்று அதிகார சபையின்
யாழ்.மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் கட்டளைப்படி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோத்தர்களினால்
இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், திருநெல்வேலி மற்றும் மானிப்பாய் ஆகிய இடங்களில் வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு 4 வர்த்தக நிலையங்களில் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கும் அதிகமான விலையில்
அரிசியை விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது. அந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும் வர்த்தக நிலையங்களில் நியாயமான விலைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பாவனையாளர்களுக்குக் கிடைப்பதற்கான வழிவகைகளும் மேற்கொள்ளப்பட்டன
என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.