யாழ்.நகரில் யாசகர் சடலமாக மீட்பு..! பட்டினியால் மரணமா? நோயால் மரணமா? சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் யாசகர் சடலமாக மீட்பு..! பட்டினியால் மரணமா? நோயால் மரணமா? சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை..

யாழ்.முற்றவெளி முனியப்பர் கோவிலில் இறை தொண்டாற்றுவதுடன், யாசம் பெற்றுவந்த முதியவர் ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த முதியவரின் சடலத்தை அடையாளம் காண முடியவில்லை. என பொலிஸார் கூறியிருக்கின்றனர். குறி த்த முதியவர் 66 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகின்றது. 

இவரை அறிந்தவர்கள் யாராவது இருப்பின் யாழ்.போதனா வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளமாறு கேட்கப் பட்டிருக்கின்றது. 

இதேவேளை குறித்த முதியவர் பசியால் இறந்ததாக கூறப்படுகின்றது. மரண விசாரணையின்போதும் குறித்த முதியவர் பசியுடன் இருந்ததை கண்டதாக சாட்சிகள் கூறப்பட்டுள்ளது. 

அதேபோல் குறித்த முதியவர் உள்ளடங்கலாக அப்பகுதியில் உள்ள யாசகர்கள் பலருக்கு உணவு வழங்கப்பட்டதா கவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு