யாழ்.மாவட்டத்தில் இன்றுள்ள சூழல் நீடித்தால் அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தலாம்..! நம்பிக்கை இருக்கிறது என்கிறார் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இன்றுள்ள சூழல் நீடித்தால் அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தலாம்..! நம்பிக்கை இருக்கிறது என்கிறார் பணிப்பாளர்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக கொரோனா நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவி ல்லை. இந்நிலை நீடித்தால் ஊடரங்கு சட்டத்தை தளர்துவது தொடர்பாக அரசாங்கம் சிந்திக்கும். என யாழ்.போத னா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். 

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று மாலை பணிப்பாளர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 7 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அவர்களில் முதலாவதாக இனங்காணப்பட்ட தாவடியை சேர்ந்த நோயாளி தற்போது உடல் நலம் தேறி வந்துள்ளதுடன் அவர் மிக விரைவில் வீடு திரும்ப உள்ளார் என்று கூறப்படுகின்றன.மிகுதி நோயாளிகளும் அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.

கடந்த சில நாட்களாக எமது மாவட்டத்தில் எந்த ஒரு கொரோனா நோயாளிகளும் இனம் காணப்படவில்லை.இது நமக்கு ஒரு ஆரோக்கியமான விடயம்.யாழ்ப்பாணத்தில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையை போல இன்னும் சில தினங்களுக்கு இருக்குமாயின் மத்திய சுகாதார அமைச்சும் 

இலங்கை அரசாங்கமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது என்று நம்புகின்றேன். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் எவருக்கும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் சங்கானை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 10 பேருக்கும் இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எந்த ஒரு நோயாளிகளும் இனம் காணப்படவில்லை கடந்த சில நாட்களாக தொற்று உள்ளவர்கள் எவரும் இனம் கானப்படவில்லை.தற்போது இருக்கின்ற நிலைமை இன்னும் சில நாட்களுக்கு தொடருமானால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த 

சாத்தியங்கள் இருப்பதாக நம்புகிறேன் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு