ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் யாழ்.மானிப்பாயில் வீடு புகுந்து கொள்ளை..!
யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில், மானிப்பாய் கிழக்கு பகுதியில் தனி மையில் வாழ்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் நகை ஆகியவற்றை திருடி சென்றிருக்கின்றனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த மூதாட்டி யின் வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல், படுக்கையல் இருந்த மூதாட்டியின் வாயை பொத்தி அமுக்கி பிடித்ததுடன், 6 பவுண் நகை, மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மானிப்பாய் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.