யாழ்.மாவட்டத்திலுள்ள சகல கோவில்களையும் துன்பப்படும் மக்களுக்கு உதவும் இடங்களாக மாற்றுங்கள்..! நல்லை குரு முதல்வர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள சகல கோவில்களையும் துன்பப்படும் மக்களுக்கு உதவும் இடங்களாக மாற்றுங்கள்..! நல்லை குரு முதல்வர் கோரிக்கை..

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆலயங்கள் பசியினால் துன்பப்படும் மக்களுக்கு உதவவேண்டும். என நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடு த்திருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வேலை இல்லாது பல கிராமங்களில் மக்கள் உண்ண உணவின்றி துன்பப்படுகின்றதை அவதானிக்க க்கூடியதாக இருக்கின்றது யாழ்ப்பாணத்தில் அதிகமான 

ஆலயங்கள் காணப்படுகின்றன ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக பல ஆலயங்களில் இந்தமுறை மஹோட்சவம் நடை பெறுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது. எனவே ஆலய நிர்வாகிகள் 

உண்ண உணவின்றி துன்பப்படுகின்ற மக்களுக்கு ஆலய மகோற்சவத்திற்கென ஒதுக்கிய நிதியில் ஒரு பகுதியினையாவது துன்படுகின்ற மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இன்று யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு