மகிழ்ச்சியான செய்தி..! 205 பேருக்கு இதுவரை சோதனை, புதிய நோயாளர்கள் எவருமில்லை, சந்தேகத்தின் பெயரிலும் அனுமதிக்கப்படவில்லை..
யாழ்.மாவட்டத்தில் இதுவரை 205 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கு ம் நிலையில் புதிதாக நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. என கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,
யாழ்.போதனா வைத்தியசாலையில் இதுவரை சந்தேகத்தின் பெயரில் எவரும் அனுமதிக்கப்பட வில்லை. எனவும், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்ட 76 பேருக்கும், தனிமை ப்படுத்தல் நிலையங்களில் உள்ள 129 பேருக்கும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
எனினும் நோயாளர் எண்ணிக்கை மாவட்டத்தில் 7ஆகவே உள்ளது. புதிதாக நோயாளர்கள் எவரு ம் அடையாளம் காணப்படவில்லை. மேலும் யாழ்.போதனா வைத்தியாலையில் சந்தேகத்தின் பெயரில் எவரும் அடையாளம் காணப்படவில்லை.