யாழ்.மாவட்டம் மிக விரைவில் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறும்..! சுவிஸ் போதகரைபோல் இனியும் எவரும் பொய் சொல்லாமல் இருந்தால்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் மிக விரைவில் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறும்..! சுவிஸ் போதகரைபோல் இனியும் எவரும் பொய் சொல்லாமல் இருந்தால்..

காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகர் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய் யினால் 7 பேர் தொற்றுக்குள்ளானதுடன், யாழ்.மாவட்டம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாகவும் அமைந்திருக்கின்றது. 

இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும். மேற்கண்டவாறு யாழ்.மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதார அமைச்சினால் நி யமிக்கப்பட்டிருக்கும் சமுதாய மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலவர ம் தொடர்பாய ஊடகங்களை சந்தித்து கருத்துகூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. 

சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் 1ம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்திருக்கின்றது. எனினும் 1ம் கட்ட பரிசோதனையில் 80 தொடக்கம் 90 வீதமானதேஅடையாளம் காணப்படும். ஆகவே 2ம், 3ம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதன் மூலம் தொற்று ள்ளவர்கள் பூரணமாக அடையாளம் காணப்படுவதுடன், தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தின் ஊடாக சமூக இடைவெளி பேண ப்படுவதன் ஊடாக யாழ்.மாவட்டத்திலிருந்து கொரோனா தொற்றை முற்றாக நீக்க முடியும். இது இலங்கையின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். 

மேலும் மாவட்டத்தில் தொற்று இல்லாமையினை தொடர்ந்து பேணுவதற்காக சில கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். குறிப்பாக யாழ்.மாவட்டத்திற் குள் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளியிடங்களில் இருந்தும் உள் நுழைவதற்கு 2 தரைவழி பாதைகளே உண்டு. 

அந்த பாதைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், காய்ச்சல் மற்றும் தொற்று தொடர்பான ஆரம்ப பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வதசிகளை செய்வதன் ஊடாக நிரந்தரமாக நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம். அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்குள் நுழைபவர்கள் 

நேர்மையாக தங்களுக்கு தொற்றிருந்தால் அதனை வெளிப்படுத்தவேண்டும். குறிப்பாக சுவிஸ் போதகர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தும் விமான நிலையத்தில் உண்மையை மறைத்து ஒரு பொய்யை கூறியதால் 7 பேர் நோய்வாய்ப்பட்டதுடன், யாழ்.மாவட்டத்தில் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

மக்களும் பாதுகாப்பாக இருந்து தொற்றிலிருந்து விடுபட உதவவேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு