யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மக்களுடன் கலந்துள்ள கொரோனா நோயாளிகளை கண்டறிய சிறப்பு திட்டம்..! 20ம் திகதிவரை ஊரடங்கு தொடரும்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மக்களுடன் கலந்துள்ள கொரோனா நோயாளிகளை கண்டறிய சிறப்பு திட்டம்..! 20ம் திகதிவரை ஊரடங்கு தொடரும்..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மக்களுடன் மக்களாக உள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை கண்டறிய சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தல மை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர கூறியிருக்கின்றார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியிருப்பதாவது, நாட்டில் அண்மைய நாள்களில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதில் சிறிய வீழ்ச்சியை அவதானிக்க முடிகிறது. 

நாம் பரிசோதனைகளை அதிகரித்துள்ள சந்தர்ப்பத்திலேயே அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.அதன் ஊடாக நாட்டில் இருக்கும் கோரோனா தொற்றாளர்களில் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிகிறது. எனினும் எமக்கு மற்றொரு சவால் உள்ளது. 

அதுதான் எந்த நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாத கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருப்பின் அவர்களை நாம் அடையாளம் காண வேண்டும்.இதன்டிப்படையில் கோரோனா தொடர்பில் அதி அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி, களுத்துறை 

ஆகிய மாவட்டங்களும் இரத்தினபுரியில் இரண்டு பொலிஸ் பிரிவுகளுமான பகுதிகளுக்குச் சென்று பொது மக்களிடமிருந்து மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது உறுதியாக நாம் கோரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோமா என்பதை 

வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.உண்மையிலேயே நாம் கோரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால் அடுத்த வாரமாகும்போது, தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை மிகப் பெரியளவிலான வீழ்ச்சியைக் காண வேண்டும். அப்படியானால் மட்டுமே 

நாம் அன்றாட நடவடிக்கைக்கு மீளலாம்.இந்தத் தொற்று, சமூகத்தின் மத்தியில் உள்ளதா என்பதை உறுதி செய்ய , சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.இந்த நிலையிலேயே அதி அபாய வலயங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி மற்றும் இரத்தினபுரியில் இரு பொலிஸ் பிரிவுகளில் பொதுமக்களின் மாதிரிகளைப் பெற்று பரிசோதிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், தற்போதைய சூழலில், கோரோனா தொற்றாளர்கள் பதிவாவது குறைவடைந்திருந்தாலும், 

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தற்போதுள்ள இறுக்கமான ஊரடங்கு நடைமுறைகளைப் பேண வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு