யாழ்.சாவகச்சேரி- மீசாலையில் இன்று அதிகாலையில் பயங்கரம்..! வயோதிப தம்பதி மீது கோடாரி தாக்குதல், வீடு புகுந்து கொள்ளையர்கள் துணிகரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சேரி- மீசாலையில் இன்று அதிகாலையில் பயங்கரம்..! வயோதிப தம்பதி மீது கோடாரி தாக்குதல், வீடு புகுந்து கொள்ளையர்கள் துணிகரம்..

யாழ்.சாவகச்சோி- மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் தனித்திருந்த வயோதிப தம்பதியை தாக்கி படுகாயப்படுத்திவிட்டு நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மீசாலை சோலையம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள குறித்த வீட்டுக்குள் நுழைவதற்காக வீட்டின் முன் பகுதி வழியாக கூரையை பிரித்த திருடர்கள்

வீட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். எனினும் நுழைய முடியாத நிலையில், சமயலறை புகைகூண்டை உடைத்து உள்நுழைய முயற்சித்துள்ளனர். அதுவும் முடியாமல்போன நிலையில், வீட்டுக்கு பின்னால் இருந்த ஏணியின் மூலம் எறி கூரையை பிரித்து உள்நுழைந்து.

வீட்டிலிருந்த வயதான தம்பதியை கோடரியால் தாக்கிய கொள்ளையர்கள் 15 ஆயிரம் ரூபாய் பணம், மோதிரம், சங்கலி, தேடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த வயோதிப தம்பதியை அயவலர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு