சுவிஸ் போதகரே யாழ்.குடாநாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்..! என உண்மை கூறிய பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு திடீர் இடமாற்றம்..!
வடமாகாண சுகாதார துறையில் உள்ள உள்வீட்டு சண்டையினால் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.தேவநேசன் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தற்போதுள்ள மிக நெருக்கடியாக சூழலிலும் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரது கவனமும் திரும்பியுள்ளது.
பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அண்மையில் ஊடகங்களை சந்தித்து சுவிஸ் போதகரே யாழ்.மாவட்டத்தின் இன்றைய நிலமைக்கு காரணம் என பகிரங்கமாக கூறியிருந்ததுடன்,
யாழ்.மாவட்டத்தின் சுகாதாரதுறை குறித்தும் பல கருத்துக்களை கூறியிருந்த நிலையில் உள்வீட்டு சதியாலேயே அவர் இடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.