ஒரு தடவையில் 24 பேருக்கு சோதிக்கும் வசதி..! யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தின் சாதனை.. பெருமை கொள்ளலாம்..

ஆசிரியர் - Editor I
ஒரு தடவையில் 24 பேருக்கு சோதிக்கும் வசதி..! யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தின் சாதனை.. பெருமை கொள்ளலாம்..

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இதுவரை 89 பேருக்கு கொரோனா தொற்று ஆய்வு செய் யப்பட்டிருப்பதாக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மருத்துவர் எஸ்.ரவிராஜ் கூறியுள்ளார். 

பரிசோதணையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படவி ல்லை என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தயி சாலையில் இன்று காலை செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,

 யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி மருத்துவர் எஸ்.ரவிராஜ், யாழ்.பல்கலைககழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.முருகானந்தா, 

யாழ்.போதனா வைத்திய சாலை துண்ணுயிரியல் வைத்திய நிபுணர் ரஜந்தி இராமச்சந்திரன், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ர விரிவுரையாளர் திருமதி கே.முருகானந்தன், 

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியசாலை தலைமை மருத்துவ தொழில்நுட்பவியலாளர் எஸ்.சுரேஸ்குமார், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் பேராசிரியர் செ.கண்ணதாசன் 

கலந்து கொண்டிருந்தனர். இச் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே ரவிராஜ் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொடர்பில் ஒரு நாளில் 20 தொடக்கம் 24 பேரில் பரிசோதனைகளை ஒரு தடவையில் மேற்கொள்ள முடியும். 

அதற்கு மேலதிகமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமே ஆனால் ஒரு நாளில் இரண்டு தடவைகள் பரிசோதனை செய்வதன் மூலம் 45 பேருக்கு சோதனை நடவடிக்கை 

மேற்கொள்ள முடியும்.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரால் பரிந்துரைக்கப்படும் நபர்களின் மாதிரிகளே குறித்த பரிசோதனைக்கு 

உட்படுத்தப்படுகின்றது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு