வெற்றிகரமாக 4வது நாளின் நண்பகல்வரை கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை..! பணிப்பாளர் மகிழ்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
வெற்றிகரமாக 4வது நாளின் நண்பகல்வரை கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை..! பணிப்பாளர் மகிழ்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 4வது நாளான இன்று நண்பகல்வரை கொரோனா நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 69 பேருக்கும், தனிமைப்படுத்தலில் உள்ள 97 பேருக்குமாக 166 பேருக்கு இதுவரை பரிசோதனை நடாத்தப்பட்டிருக்கின்றது. எனினும் எவரும் தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை. 

மாவட்டத்தில் இதுவரை 7 பேர் மட்டுமே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. என பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு