யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1வது கொரோனா நோயாளி பூரண குணமடைந்தார்..! விரைவில் வீடு திரும்புகிறார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1வது கொரோனா நோயாளி பூரண குணமடைந்தார்..! விரைவில் வீடு திரும்புகிறார்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 1வது நபர் பூரண குணமடைந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

யாழ்.தாவடி பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்ற குடும்பஸ்த்தர் சுவிஸ் போதகருடன் சில மணி நேரம் பேசிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.மாவட்டத்தில் 

1வது நபராக கடந்த மாதம் 22ம் திகதி அடையாளம் காணப்பட்டு தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் விவேகானந்தன் பூரண குணமாகியிருப்பதாக தொற்று நோயியல் மருத்துவமனையில் இருந்து தொலைபேசி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், 

தற்போது சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள அவர் விரைவில் வீடு திரும்பவுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு