யாழ்.மாவட்ட மக்களே எச்சரிக்கை..! ஊரடங்கு வேளையில் திருடர்கள் நடமாட்டம் அதிகரிப்பு..
யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் திருட்டு சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றது. நேற்றய தினம் ஒரு இடத்தில் திருட்டு இடம்பெற்றிருப்பதுடன், மற்றொரு இடத்தில் திருட்டு முயற்சி தடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் பல இடங்களில் தேங்காய், மாங்காய் திருட்டு சம்பவங்கள் வீடு புகுந்து நடாத்தப் பட்டிருக்கின்றது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோதும், நகரை அண்டிய கிராமங்களு க்குள் மக்கள் நடமாட்டம் சரளமாக இருக்கும் நிலையில்
அதனை சாதகமாக பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.