யாழ்.மாவட்டத்தில் 15 பேருக்கு இன்று மருத்துவ பரிசோதனை..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 15 பேருக்கு இன்று மருத்துவ பரிசோதனை..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்..

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக் கும் தொற்று இல்லை. என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

அரியாலை மத போதகருடன் தொடர்பில் இருந்த 8 பேர் நாவாந்துறைப் பகுதியில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான 

மருத்துவ பரிசோதணை செய்யப்பட்டது.அதே போன்று பருத்தித்துறையை சேர்ந்த ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் உள்ள 6 பேரும் பரிசோதிக்கப்பட்டனர்.

இருப்பினும் பரிசோதணை மேற்கொள்ளப்பட்டவர்களில் ஒருவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பணிப்பாளர் மேலும் தகவல் வெளியிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு