யாழ்.மல்லாகதில் ஆவா குழு ரவுடிகள் இராணுவத்தால் முற்றுகை..! பிறந்தநாள் கொண்டாட்டத்தை விட்டு ரவுடிகள் தப்பி ஓட்டம், 3 ரவுடிகள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மல்லாகதில் ஆவா குழு ரவுடிகள் இராணுவத்தால் முற்றுகை..! பிறந்தநாள் கொண்டாட்டத்தை விட்டு ரவுடிகள் தப்பி ஓட்டம், 3 ரவுடிகள் கைது..

யாழ்.மாவட்டம் ஊரடங்கு சட்டத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆவா குழுவின் தலைவர் என கூறப்ப டும் வினோதன் என்பவனின் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகளை இராணுவத்தினர் முற்றுகையிட்ட நிலையில் 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், வினோதன் உள்ளிட்டி பல ரவுடிகள் தப்பி ஓடியுள்ளனர். 

இந்த சம்பவம் யாழ்.மல்லாகம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பான தகவலறிந்து பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த வீட்டினை  இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். அதன்போதே 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வினோதன் உள்ளிட்ட கொண்டாட்டத்தில் பங்கேற்ற பலர் இராணுவத்தினரின் வருகையறிந்து அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், ஊரடங்கு வேளையில் பொலிஸ் அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு