ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதரத்தை இழந்திருக்கும் மக்களுக்கு 1லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் தன் சொந்த நிதியை வழங்கிய சீ.வி.கே..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதரத்தை இழந்திருக்கும் மக்களுக்கு 1லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் தன் சொந்த நிதியை வழங்கிய சீ.வி.கே..

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களு க்காக சுமார் 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் நிதியை வடமாகாணசபை அவை தலைவரும், தமிழர சு கட்சியின் மூத்த துணை தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் வழங்கியுள்ளார். 

தனது சொந்த நிதியையே வழங்கியிருக்கின்றார். இதன் படி இருபாலை தெற்கு கிராமத்திற்கு நாப்பதாயிரம் (40,000) ரூபா பெறுமதியான பொருட்கள்,தாவடி ஆசாரியார் வீதியில் உள்ள குறித்த ஒரு பகுதிக்கு நாப்பதாயிரம் (40,000) ரூபா பெருமதியான பொருட்கள்,

வலிகாமம் வடக்கின் குறித்த ஒரு பகுதிக்கு நாப்பதாயிரம் (40,000) ரூபா பெருமதியான பொருட்கள்,கோண்டாவில் நாராயணன் பகுதிக்கு இருபதாயிரம் (20,000) ரூபா பெருமதியான பொருட்கள்,கொட்டடி கற்குளம் பகுதிக்கு இருபதாயிரம் (20,000) ரூபா பெருமதியான 

பொருட்களை வழங்கிவைத்துள்ளதுடன் அடையாளப்படுத்த முடியாத சில குடும்பங்களுக்கு முப்பத்தாறாயிரம் (36,000) ரூபாவினை பணமாக வழங்கி வைத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு