கம்போடியாவிலிருந்து வந்தவர் திடீர் மரணம்..! கொரோனா காரணமா? யாழ்.மந்திகை வைத்தியசாலையில் பரபரப்பு, இரத்த மாதிரி பரிசோதனைக்கு..
யாழ்.மந்திகை வைத்தியசாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபர் ஒரு வர் திடீரென உயிரிழந்தமையால் பரபரப்பான நிலையில், உயிரிழந்தவரின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோ தனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இன்று அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.
அவர் வீசிங் நோயாளி. கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு
கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது” என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். உயிரிழந்தவரின் சடலம் மந்திகை வைத்தியசாலை பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது.