யாழ்.நகரில் பொலிஸார் அதிரடி..! 10 பெண்கள் உள்ளடங்கலாக 37 பேர் கைது, வாகனங்கள் பறிமுதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் பொலிஸார் அதிரடி..! 10 பெண்கள் உள்ளடங்கலாக 37 பேர் கைது, வாகனங்கள் பறிமுதல்..

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.நகருக்குள் காரணமில்லாமல் நடமாடிய 10 பெண்கள் உள்ள டங்கலாக 37 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் நகரில் இன்று திங்கட்கிழமை மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது. இதனால் முற்பகல் 10 மணியளவில் 

போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வந்திறங்கிய யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி 

வாகனங்களில் செல்வோரிடம் விசாரணை நடத்தினர். இதன்போது, மருந்தகங்களுக்கு செல்வதற்கான மருத்துவரின் சிட்டை காண்பித்தவர்களும் அத்தியாவசிய சேவைகளுக்கான 

அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். காரணமின்றி பயணித்தவர்களை பொலிஸார் தடுத்துவைத்துள்ளனர். அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் 

என்றும் அவர்களது வாகனங்கள் அசாதாரண நிலை முடியும் வரை தடுத்துவைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு