யாழ்.தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய வளாகத்திற்குள் நடந்த துயரம்..! மின்சாரம் தாக்கி இளைஞன் பலி..
யாழ்.தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, துர்க்கை அம்மன் ஆலயத்தில் கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.