கொடிகாமம்- விடத்தல்பளை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 233 பேர் இன்று காலை வீடு திரும்பினர்..!
யாழ்.கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 233 வெளிநாட்டவர்கள் இன்று காலை தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாட்டிலிருந்துவந்த 233 பேர் கொடிகாம ம் - விடத்தல்பளை 522வது படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களுடைய தனிமைப்படுத்தல் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவ பரிசோ தனையின் பின்னர் இன்று காலை தமது வீடுகளுக்கு அனுப்பபட்டனர்.